ஞாலம் வறம் தீரப் பெய்யக் குணக்கு ஏர்புகாலத்தில் தோன்றிய கொண்மூ போல், எம் முலை
பாலொடு வீங்கத் தவ நெடிது ஆயினை,
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க வழி எல்லாம் கூறு;
கூறுவேன்; மேயாயே போல வினவி, வழிமுறைக்
காயாமை வேண்டுவல் யான்;
காயேம்;
மடக் குறு மாக்களோடு ஓரை அயரும்
அடக்கம் இல் போழ்தின் கண், தந்தை காமுற்ற
தொடக்கத்துத் தாய் உழை புக்காற்கு, அவளும்
மருப்புப் பூண் கையுறை ஆக அணிந்து -
'பெருமான்! நகை முகம் காட்டு' என்பாள், கண்ணீர்
சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன; மற்றும்,
வழிமுறைத் தாய் உழைப் புக்காற்கு, அவளும்
மயங்கு நோய் தாங்கி, மகன் எதிர் வந்து,
முயங்கினள் முத்தினள் நோக்கி, நினைந்தே,
'நினக்கு யாம் யாரேம் ஆகுதும்?' என்று,
வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள்,
ஆங்கே, 'அரி மதர் உண் கண் பசப்ப நோய் செய்யும்
பெருமான் பரத்தைமை ஒவ்வாத' என்றாள்;
அவட்கு இனிது ஆகி விடுத்தனன் போகித்
தலைக் கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்
புலத் தகை புத்தேள் இல் புக்கான்- அலைக்கு ஒரு
கோல் தா; நினக்கு அவள் யார் ஆகும்? - எல்லா!
வருந்தி யாம் நோய் கூர, நுந்தையை என்றும்
பருந்து எறிந்தற்று ஆகக் கொள்ளும்; கொண்டாங்கே
தொடியும் உகிரும் படை ஆக நுந்தை
கடி உடை மார்பின் சிறு கண்ணும் உட்காள்,
வடுவும் குறித்தாங்கே செய்யும்; விடு, இனி;
அன்ன பிறவும், பெருமான் அவள் வயின்
துன்னுதல் ஓம்பித், திறவது இல் முன்னி, நீ
ஐயம் இல்லாதவர் இல் ஒழிய, எம் போலக்
கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்;
அமைந்தது; இனி நின் தொழில்.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework