நயம் தலை மாறுவார் மாறுக; மாறாக்கயம் தலை மின்னும் கதிர் விடு முக் காழ்ப்,
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கித் -
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆகத் தைஇப்
பவழம் புனைந்த பருதி சுமப்பக்
கவழம் அறியா நின் கை புனை வேழம்
புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி,
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே
வருக! - எம் பாக மகன்!
கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும்
தளர் நடை காண்டல் இனிது; மற்று இன்னாதே,
'உளம்' என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார்
வளை நெகிழ்பு யாம் காணும் கால்;
ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா, என்னும் நின்
தே மொழி கேட்டல் இனிது; மற்று இன்னாதே,
உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார்
எவ்வ நோய் யாம் காணும் கால்;
ஐய! 'திங்கள் குழவி! வருக!' என, யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது; மற்று இன்னாதே,
நல்காது, நுந்தை புறம் மாறப்பட்டவர்
அல்குல் வரி யாம் காணும் கால்;
ஐய! எம் காதில் கனம் குழை வாங்கிப், பெயர்தொறும்,
போது இல் வறும் கூந்தல், கொள்வதை, நின்னை யாம் -
ஏதிலார் கண் சாய - நுந்தை வியல் மார்பில்
தாது தேர் வண்டின் கிளை பாடத், தைஇய
கோதை பரிபு ஆடக், காண்கும்.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework