நோக்கும்கால் நோக்கித் தொழூஉம், பிறர் காண்பார்தூக்கு இலி; தூற்றும் பழி என கை கவித்துப்
போக்கும்கால், போக்கு நினைந்திருக்கும்; மற்று நாம்
காக்கும் இடம் அன்று, இனி;
எல்லா! எவன் செய்வாம்?
பூங் குழாய்! செல்லல் அவன் உழைக் கூஉய்க் கூஉய்
விரும்பி யான் விட்டேனும் போல்வல்; என் தோள் மேல்
கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல்; 'ஈங்கு ஆக
இருந்தாயோ?' என்று ஆங்கு இற;
அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும், நோய் தீர்க்கும்
மருந்து நீ ஆகுதலான்;
இன்னும், கடம் பூண்டு ஒரு கால் நீ வந்தை, 'உடம்பட்டாள்'
என்னாமை என் மெய் தொடு;
இ·தோ அடங்கக் கேள்;
நின்னொடு சூழும்கால், நீயும் நிலம் கிளையா,
என்னொடு நிற்றல் எளிது அன்றோ? மற்று அவன்
தன்னொடு நின்று விடு.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework