படை பண்ணிப் புனையவும் பா மாண்ட பல அணைப்புடை பெயர்ந்து ஒடுங்கவும், புறம் சேர உயிர்ப்பவும்,
'உடையதை எவன் கொல்?' என்று ஊறு அளந்தவர் வயின்
நடை செல்லாய், நனி ஏங்கி நடுங்கல் காண் - நறு நுதால்!
தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்பத், துறந்து நீ,
வல் வினை வயக்குதல் வலித்திமன்; வலிப்பளவை,
நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது,
நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ?
ஆற்றா நோய் அட, இவள் அணி வாட, அகன்று நீ,
தோற்றம் சால் தொகு பொருள் முயறிமன், முயல்வளவை
நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்குக்
கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ் நாளும் நிலையுமோ?
வகை எழில் வனப்பு எஞ்ச, வரை போக வலித்து நீ,
பகை அறு பய வினை முயறிமன்; முயல்வளவைத்,
தகை வண்டு புதிது உண்ணத் தாது அவிழ் தண் போதின்
முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ?
என ஆங்கு,
பொருந்தி யான் தான் வேட்ட பொருள் வயின் நினைந்த சொல்,
திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்து போல், மருந்து, ஆகி மனன் உவப்பப்
பெரும் பெயர் மீளி - பெயர்ந்தனன் செலவே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework