வெதிர்ங் குதைச் சாபம் கான்ற வெம் நுனைப் பகழி மூழ்க
உதிர்ந்தது சேனை ஈட்டம் கூற்றொடு பொருது கொள்ளும்
கருந் தடங் கண்ணி அன்றிக் காயம் ஆறு ஆக ஏகும்
அரும் பெறல் அவளும் ஆகென்று ஆடவர் தொழுது விட்டார்.
441

 

கார் விரி மின் அனார் மேல் காமுகர் நெஞ்சி னோடும்
தேர் பரி கடாவித் தேம் தார்ச் சீவகன் அருளில் போகித்
தார் பொலி புரவி வட்டம் தான் புகக் காட்டு கின்றாற்கு
ஊர் பரிவுற்றது எல்லாம் ஒரு மகன் உணர்த்தினானே.
442

 

தன் பால் மனையாள் அயலான் தலைக் கண்டு பின்னும்
இன் பால் அடிசில் இவர்கின்ற கைப் பேடி போலாம்
நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார்
என்பாரை ஓம்பேன் எனின் யான் அவன் ஆக என்றான்.
443

 

போர்ப் பண் அமைத்து நுகம் பூட்டிப் புரவி பண்ணித்
தேர்ப் பண் அமைத்துச் சிலை கோலிப் பகழி ஆய்ந்து
கார்க் கொண்மூ மின்னி நிமிர்ந்தான் கலிமான் குளம்பில்
பார்க் கண் எழுந்த துகளால் பகல் மாய்ந்தது அன்றே.
444
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework