துறை: வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்: புண்உடை எறுழ்த்தோள்

வான்மருப்பின் களிற்றுயானை
மாமலையில் கணண்கொண்(டு)அவர்
எடுத்(து)எறிந்த விறல்முரசம்
கார்மழையின் கடிதுமுழங்கச்
சாந்துபுலர்ந்த வியல்மார்பிற் 5
தொடிசுடர்வரும் வலிமுன்கைப்
*புண்உடை எறுழ்த்தோள்* புடையல்அம் கழல்கால்
பிறக்(கு)அடி ஒதுங்காப் பூட்கை ஒள்வாள்
ஒடிவல் தெவ்வர் எதிர்நின்(று) உரைஇ
இடுக திறையே புர(வு)எதிர்ந் தோற்(கு)என 10
அம்(பு)உடை வலத்தர் உயர்ந்தோர் பரவ
அனையை ஆகல் மாறே பகைவர்
கால்கிளர்ந் தன்ன கதழ்பா஢ப் புரவிக்
கடும்பா஢ நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி
புலவரைத் தோன்றல் யாவது சினப்போர் 15
நிலவரை நிறீஇய நல்லிசைத்
தொலையாக் கற்பநின் தெம்முனை யானே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework