துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்: மண்கெழுஞாலம்

மலைஉறழ் யானை வான்தோய் வெல்கொடி
வரைமிசை அருவியின் வயின்வயின் நுடங்கக்
கடல்போல் தானைக் கடுங்குரல் முரசம்
கால்உறு கடலின் கடிய உரற
எறிந்துசிதைந்த வாள் 5
இலைதொ஢ந்த வேல்
பாய்ந்(து)ஆய்ந்த மா
ஆய்ந்துதொ஢ந்த புகல்மறவரொடு
படுபிணம் பிறங்க நூறிப் பகைவர்
கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே 10
நின்போல், அசைவில் கொள்கையர் ஆகலின் அசையா(து)
ஆண்டோ ர் மன்றஇம் *மண்கெழு ஞாலம்*
நிலம்பயம் பொழியச் சுடர்சினம் தணியப்
பயங்கெழு வெள்ளி ஆநியம் நிற்ப
விசும்புமெய் அகலப் பெயல்புர(வு) எதிர 15
நால்வேறு நனம்தலை ஓராங்கு நந்த
இலங்குகதிர்த் திகி஡஢ முந்திசி னோரே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework