துறை: பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நாள்மகிழிருக்கை

எறிபிணம் இடறிய செம்மறுக் குளம்பின்
பா஢உடை நல்மா வி஡஢உளை சூட்டி
மலைத்த தெவ்வர் மறம்தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும
வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ 5
பூண்அணிந்(து) எழிலிய வனைந்துவரல் இளமுலை
மாண்வா஢ அல்குல் மலர்ந்த நோக்கின்
வேய்புரை(பு) எழிலிய விளங்(கு)இறைப் பணைத்தோள்
காமர் கடவுளும் ஆளும் கற்பின்
சேண்நாறு நறுநுதல் சேஇழை கணவ 10
பாணர் புரவல பா஢சிலர் வெறுக்கை
பூண்அணிந்து விளங்கிய புகழ்சால் மார்பநின்
*நாள்மகிழ் இருக்கை* இனிதுகண் டிகுமே
தீம்தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்குச் 15
வேறுசெய் மா஡஢யின் அளிக்கும்நின்
சாறுபடு திருவின் நனைமகி ழானே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework