பெயர் - பூத்த நெய்தல் (3)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் - ஒழுகு வண்ணம்
தொறுத்தவயல் ஆரல்பிறழ்நவும்
ஏறுபொருதசெறு உழாதுவித்துநவும்
கரும்பின் பாத்திப் *பூத்த நெய்தல்*
இருங்கண் எருமையின் நிரைதடுக் குநவும்
கலிகெழு துணங்கை ஆடிய மருங்கின் 5
வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்
ஒலிதெங்கின் இமிழ்மருதின்
புனல்வாயில் பூம்பொய்கைப்
பாடல் சான்ற பயம்கெழு வைப்பின்
நாடுகவின் அழிய நாமம் தோற்றிக் 10
கூற்(று)அடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந்(து) இறுத்த நீர்அழி பாக்கம்
வி஡஢பூங் கரும்பின் கழனி புல்எனத்
தி஡஢காய் விடத்தரொடு காருடை போகிக்
கவைத்தலைப் பேய்மகள் கழு(து)ஊர்ந்(து) இயங்க 15
ஊ஡஢ய நெருஞ்சி நீ(று)ஆடு பறந்தலைத்
தா(து)எரு மறுத்த கலிஅழி மன்றத்(து)
உள்ளம் அழிய ஊக்குநர் மிடல்தபுத்
துள்ளுநர் பனிக்கும் பாழா யினவே
காடே கடவுள் மேன புறவே 20
ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
ஆறே அவ்வனைத்(து) அன்றியும் ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
குடிபுறம் தருநர் பாரம் ஓம்பி
அழல்சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது 25
மழைவேண்டு புலத்து மா஡஢ நிற்ப
நோயொடு பசிஇகந்(து) ஒ஡ணஇப்
பூத்தன்று பெருமநீ காத்த நாடே.


JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework