அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்
இரவின் வருதல் அன்றியும் உரவுக் கணை
வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையடு
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட
வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட
நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி தோழி என்றும்
அயலோர் அம்பலின் அகலான்
பகலின் வரூஉம் எறி புனத்தானே
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச்
சொல்லுவாளாய் தலைமகன் கேட்ப அம்பலும்
அலரும் ஆயிற்று என்று சொல்லியது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework