செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக்
காணார் முதலொடு போந்தென பூவே
படையடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்
தன்னுறு விழுமம் அறியா மென்மெல
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும்
பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பதற்கு
யான் நினைந்து இரங்கேனாக நோய் இகந்து
அறனிலாளன் புகழ எற்
பெறினும் வல்லேன்மன் தோழி யானே
சிறைப்புறமாகத் தலைமகனது வரவுணர்ந்து
வற்புறுப்ப வன்புறை எதிர்மொழிந்தது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework