யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல்
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்
கொடுங் கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத்
துறு கடற் தலைய தோடு பொதி தாழை
வண்டு படு வான் போது வெரூஉம்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே
வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற
தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework