மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அச் செல்வம்படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப,
மாயவள் மேனி போல் தளிர் ஈன, அம் மேனித்
தாய சுணங்கு போல் தளிர் மிசைத் தாது உக,
மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப,
அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார,
நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால்,
'துறந்து உள்ளார் அவர்' எனத், துனி கொள்ளல், எல்லா! நீ;
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர்த்
தண் அருவி நறு முல்லைத் தாது உண்ணும் பொழுது அன்றோ-
கண் நிலா நீர் மல்கக் கவவி, நாம் விடுத்தக்கால்
ஒள் நுதால்! நமக்கு அவர் 'வருதும்' என்று உரைத்ததை?
மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து, அவர்
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது அன்றோ -
'வலன் ஆக, வினை!' என்று வணங்கி, நாம் விடுத்தக்கால்,
ஒளி இழாய்! நமக்கு அவர் 'வருதும்' என்று உரைத்ததை?
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ-
பல நாடு நெஞ்சினேம் பரிந்து, நாம் விடுத்தக்கால்,
சுடர் இழாய்! நமக்கு அவர் 'வருதும்' என்று உரைத்ததை?
என ஆங்கு,
உள்ளுதொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி,
எள் அறு காதலர் இயைதந்தார் - புள் இயல்
காமர் கடும் திண்தேர் பொருப்பன்,
வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework