என்மகள் பெருமடம் யான்பா ராட்டத்தாய்தன் செம்மல் கண்டுகடன் இறுப்ப
முழவுமுகம் புலரா விழவுடை வியனகர்
மணனிடை யாகக் கொள்ளான் 'கல்பகக்
கணமழை துறந்த கான்மயங்கு அழுவம் 5
எளிய வாக ஏந்துகொடி பரந்த
பொறிவரி அல்குல் மாஅயோட்கு' எனத்
தணிந்த பருவம் செல்லான் படர்தரத்
துணிந்தோன் மன்ற துனைவெங் காளை
கடும்பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்திப் 10
போழ்புண் படுத்த பொரியரை ஓமைப்
பெரும்பொளிச் சேயரை நோக்கி ஊன்செத்துச்
கருங்கால் யாத்துப் பருந்துவந்து இறுக்கும்
சேண்உயர்ந்து ஓங்கிய வானுயர் நெடுங்கோட்டுக்
கோடை வெவ்வளிக்கு உலமரும் புல்லிலை வெதிர நெல்விளை காடே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework