நாள்உலா எழுந்த கோள்வல் உளியம்ஓங்குசினை இருப்பைத் தீம்பழம் முனையின்,
புல்அளைப் புற்றின் பல்கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனைவாய் நெடுங்கோடு
அரும்புஊது குருகின், இடந்து, இரை தேரும் 5
மண்பக வறந்த ஆங்கண் கண்பொரக்
கதிர்தெறக் கவிழ்ந்த உலறுதலை நோன்சினை
நெறிஅயல் மராஅம் ஏறிப், புலம்புகொள
எறிபருந்து உயவும் என்றூழ் நீள்இடை
வெம்முனை அருஞ்சுரம் நீந்திச் - சிறந்த 10
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர்
ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கும்
மாவண் கடலன் விளங்கில் அன்ன, எம்
மைஎழில் உண்கண் கலுழ-
ஐய! சேறிரோ, அகன்றுசெய் பொருட்கே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework