நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலைகடல்பாடு அழிய, இனமீன் முகந்து,
துணைபுணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
உப்புஒய் உமணர் அருந்துறை போக்கும் 5
ஒழுகை நோன்பகடு ஒப்பக் குழீஇ
அயிர்திணி அடைகரை ஒலிப்ப வாங்கிப்,
பெருங்களம் தொகுத்த உழவர் போல,
இரந்தோர் வறுங்கலம் மல்க வீசி,
பாடுபல அமைத்துக் கொள்ளை சாற்றிக் 10
கோடுஉயர் திணிமணல் துஞ்சும் துறைவ!
பெருமை என்பது கெடுமோ - ஒருநாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண்நறுங் கானல் வந்து "நும்
வண்ணம் எவனோ?" என்றனிர் செலினே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework