327.
நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு
ஊணின்றி ஆகாது உயிர்வாழ்க்கை - பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய்!
'வித்தின்றிச் சம்பிரதம் இல்'.
328.
உரிமைதனில் தம்மோடு உழந்தமை கண்டு
பிரிவின்றிப் போற்றப் படுவார் - திரிவின்றித்
தாம்பெற் றதனால் உவவார் 'பெரிதகழின்
பாம்புகாண் பாரும் உடைத்து'.
329.
அகத்தால் அழிவு பெரிதாயக் கண்ணும்
புறத்தால் பொலிவுறல் வேண்டும் - எனைத்தும்
படுக்கை இலராயக் கண்ணும் 'உடுத்தாரை
உண்டி வினவுவார் இல்'.
330.
சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பில்தம்
இல்லாளே வந்த விரும்தோம்பிச் - செல்வத்து
இடரின்றி ஏமாந் திருந்தாரே 'நாளும்
கடலுள் துலாம்பண்ணி னார்'.
331.
எந்நெறி யானும் இறைவன்தன் மக்களைச்
செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் - அந்நெறி
மான்சேர்ந்த நோக்கினாய் ! - ஆங்க 'அணங்காகும்
தான்செய்த பாவை தனக்கு'.
332.
ஒக்கும் வகையான் உடன்பொருள் சூதின்கண்
பக்கத் தொருவன் ஒருவன்பாற் பட்டிருக்கும்
மிக்க சிறப்பின ராயினும் 'தாயார்க்கு
மக்களுள் பக்கமோ வேறு'.
333.
தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம்
மடுத்(து)அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப
நெறியல்ல சொல்லல்நீ பாண! - 'அறிதுயில்
யார்க்கும் எழுப்பல் அரிது'.
334.
விழும்இழை நல்லார் வெருள்பிணைபோல் நோக்கம்
கெழுமிய நாணை மறைக்கும் - தொழுதையுள்
மாலையும் மாலை மறுக்குறுத்தாள் அஃதால்
'சால்பினைச் சால்பறுக்கு மாறு'.
335.
தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்தும்
தாமே தமியர் புகல்வேண்டா - தீமையான்
ஊர்மிகின் இல்லை கரியோ ஒலித்துடன்
'நீர்மிகின் இல்லை சிறை'.
336.
நிறையான் மிகுநல்லா நேரிழை யாரைச்
சிறையான் அகப்படுத்தல் ஆகா - அறையோ
வருந்த வலிதினின் யாப்பினும் 'நாய்வால்
திருந்துதல் என்றுமோ இல்'.
337.
நல்கூர்ந் தவர்க்கு நனிபெரியர் ஆயினார்
செல்விருந் தாகிச் செலவேண்டா - ஓல்வது
இறந்தவர் செய்யும் வருத்தம் 'குருவி
குறங்கறுப்பச் சோரும் குடர்.'
338.
உடுக்கை மருந்துறையுள் உண்டியோ(டு) இன்ன
கொடுத்துக் குறைதீர்த்தல் ஆற்றி - விடுத்தின்சொல்
ஈயாமை என்ப 'எருமை எறிந்தொருவர்
காயக்கு லோபிக்கும் ஆறு'.
339.
தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல
செத்துக சாந்து படுக்கமனன் - ஒத்துச்
சகத்தனாய் நின்றொழுகும் சால்பு தவமே
'நுகத்துப் பகலாணி போன்று'.
340.
உள்ள தொருவர் ஒருவர்கை வைத்தக்கால்
கொள்ளும் பொழுதே கொடுக்கதாம் - கொள்ளார்
நிலைப்பொருள் என்றதனை நீட்டித்தல் வேண்டா
'புலைப்பொருள் தங்கா வெளி'.
341.
நன்றே ஒருவர்த் துணையுடைமைப் பாப்பிடுக்கண்
நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் - விண்டோ யும்
குன்றகல் நன்னாட! கூறுங்கால் 'இல்லையே
ஒன்றுக்(கு) உதவாத ஒன்று'.
342.
விடலரிய துப்புடைய வேட்கையை நீக்கிப்
படர்வரிய நன்னெறிக்கண் நின்றார் - இடருடைத்தாப்
பெற்ற விடக்கு நுகர்தல் 'கடல்நீந்திக்
கற்றடியுள் ஆழ்ந்து விடல்'.
343.
செறலிற் கொலைபுரிந்து சேண்உவப்பார் ஆகி
அறிவின் அருள்புரிந்து செல்லார் - பிறிதின்
உயிர்செகுத்(து) ஊன்துய்த்(து) ஒழுகுதல் ஓம்பார்
'தயிர்சிதைத்து மற்றொன்(று) அடல்'.
344.
நன்கன்(று) அறிபவர் நாழி கொடுப்பவர்க்(கு)
என்றும் உறுதியே சூழ்க எறிதிரை
சென்றுலாம் சேர்ப்ப ! அதுபோல 'நீர்போயும்
ஒன்றிண்டாம் வாணிகம் இல்'.
345.
தமனென்று இருநாழி ஈந்தவன் அல்லால்
நமனென்று காயினும் தான்காயான மன்னே!
அவனிவன் என்றுரைத்து எள்ளிமற் 'றியாரே
நமநெய்யை நக்கு பவர்'
346.
நாடி நமரென்று நன்கு புரந்தாரைக்
கேடு பிறரோடு சூழ்தல் - கிளர்மணி
நீடுகல் வெற்ப ! நினைப்பின்றித் 'தாமிருந்த
கோடு குறைத்து விடல்'.
347.
பண்டின ரென்று தமரையும் தம்மையும்
கொண்ட வகையால் குறைதீர நோக்கியக்கால்
விண்டவரோ(டு) ஒன்றிப் புறனுரைப்பின் அஃதாலவ்
'உண்டஇல் தீயிடு மாறு'

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework