266.
கொடித்திண்டேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்
எடுத்துமேற் கொண்டவர் ஏய வினையை
மடித்தொழிதல் என்னுண்டாம்? மாணிழாய்! 'கள்ளைக்
குடித்துக் குழைவாரோ இல்'.
267.
வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால் யாமொன்றும்
பெற்றிலேம் என்பது பேதைமையே - மற்றதனை
எவ்வம் இலராகிச் செய்க அதுவன்றோ
'செய்கென்றான் உண்கென்னு மாறு'.
268.
எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
தமரைத் தலைவைத்த காலைத் - தமரவற்கு
வேலின்வா யாயினும் வீழார் மறுத்துரைப்பின்
'ஆல்என்னிற் பூல்என்னு மாறு'.
269.
விடலமை செய்து வெருண்டகன்று நில்லாது
உடலரு மன்னர் உவப்ப ஒழுகின்
மடலணி பெண்ணை மலிதிரை சேர்ப்ப!
'கடல்படா வெல்லாம் படும்'.
270.
உவப்ப உடன்படுத்தற் கேய கருமம்
அவற்றவற் றாந்துணைய வாகிப் பயத்தால்
வினைமுதிரின் செய்தான்மேல் ஏறும் பனைமுதிரின்
தாய்தாள்மேல் வீழ்ந்து விடும்'.
271.
செருக்கெழு மன்னர் திறலுடையார் சேர்ந்தார்
ஒருத்தரை அஞ்சி உலைதலும் உண்டோ ?
உருத்த சுணங்கின் ஒளியிழாய் ! 'கூரிது
எருத்து வலியநன் கொம்பு'.
272.
வேந்தன் மதித்துவப்பப் பட்டாரைக் கொண்டேனை
மாந்தரும் ஆங்கே மதித்துணர்வர் - ஆய்ந்த
நலமென் கதுப்பிாய் ! நாடின 'நெய்பெய்த
கலனேநெய் பெய்து விடும்'.
273.
ஆண்டகை மன்னரைத் சார்ந்தார்தாம் அல்லுறினும்
ஆண்டொன்று வேண்டுதும் என்பது உரையற்க
பூண்தாங்கு மார்ப! பொருள்தக்கார் 'வேண்டாமை
வேண்டிய தெல்லாம் தரும்'.
274.
காவலனை ஆக வழிபட்டார் மற்றவன்
ஏவல் வினைசெய் திருந்தார்க்(கு) உதவடுத்தல்
ஆவணைய நின்றதன் கன்று 'முலையிருப்பத்
தாயணல் தான்சுவைத் தற்று'.
275.
சிறப்புடை மன்னவரைச் செவ்வியின் நோக்கித்
திறத்தின் உரைப்பாரைக்கொன் (று) ஆகாத தில்லை
விறற்புகழ் மன்னர்க்(கு) உயிரன்ன ரேனும்
'புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன்'.
276.
இடுகுடைத்தேர் மன்னர் எமக்கமையும் என்று
கடிதவர்தாம் காதலிப்பத் தாம்காதல் கொண
மூடிய எனைத்தும் உணரா முயறல்
'கடிய கனைத்து விடல்'.
277.
சீர்த்தகு மன்னர் சிறந்தனைத்தும் கெட்டாலும்
நேர்த்துரைத்(து) எள்ளார் நிலைநோக்கிச் - சீர்த்த
கிளையின்றிப் போஒய்த் தனித்தாயக் கண்ணும்
'இளைதென்று பாம்பிகழ்வார் இல்'
278.
செருக்குடைய மன்னர் இடைப்புக்(கு) அவருள்
ஒருத்தற்(கு) உதவாத சொல்லின் தனக்குத்
திருத்தலும் ஆகாது தீதரம் அதுவே
'எருத்திடை வைக்கோல் தினல்'.
279.
பன்னாள் தொழில்செய்து உடைய கவர்ந்துண்டார்
இன்னாமை செய்யாமை வேண்டி இறைவர்க்குப்
பொன்யாத்துக் கொண்டு புகுதல் 'குவளையைத்
தன்னாரால் யாத்து விடல்'.
280.
மெய்ம்மையே நின்று மிகநோக்கப் பட்டவர்
கைம்மேலே நின்று கறுப்பன செய்தொழுகிப்
பொய்ம்மேலே கொண்டவ் விறைவற்கொன் றார் 'குறைப்பர்
தம்மேலே வீழப் பனை.'
281.
வெஞ்சின மன்னவன் வேண்டாதவே செயினும்
நெஞ்சத்துட் கொள்வ சிறிதும் செயல்வேண்டா
என்செய்து அகப்பட்டக் கண்ணும் 'எழுப்புபவோ
துஞ்சு புலியைத் துயில்'.
282.
தாமேயும் தம்மைப் புறந்தர வாற்றாதார்
வாமான்றோ மன்னரைக் காய்வது எவன்கொலோ?
ஆமா உகளும் அணிவரை வெற்ப! கேள்
'ஏமரார் கோங்கு ஏறினார்'.
283.
உறாஅ வகையது செய்தாரை வேந்தன்
பொறாஅன் போலப் பொறுத்தால் - பொறாஅமை
மேன்மேலும் செய்து விடுதல் அதுவன்றோ
'கூன்மேல் எழுந்த குரு'.
284.
பொருளல்லார் கூறிய பொய்க்குறளை வேந்தன்
தெருளும் திறந்தெரிதல் அல்லால் - வெருளஎழுந்து
ஆடு பவரோடே ஆடார் உணர்வுடையார்
'ஆடுபணைப் பொய்க்காலே போன்று'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework