311.
தூக்கி அவர்வெலினும் தாம்வெலினும் வெஞ்சமத்துள்
தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர் அஃதன்றிக்
காப்பின் அகத்திருந்து காய்வார் மிகவுரைத்தல்
'யாப்பினுள் அட்டிய நீர்'.
312.
உற்றால் இறைவற்(கு) உடம்பு கொடுக்கிற்பான்
மற்றவற்(கு) ஒன்னாரோ(டு) ஒன்றுமோ - தெற்ற
முரண்கொண்டு மாறாய உண்ணுமோ 'உண்ணா
இரண்டேறு ஒருதுறையுள் நீர்'.
313.
ஆற்ற வினைசெய்தார் நிற்பப் பலவுரைத்து
ஆற்றாதார் வேந்தனை நோவது சேற்றுள்
வழாஅமைக் காத்தோம்பி 'வாங்கும் எருதாங்கு
எழாஅமைச் சாக்கா டெழல்'.
314.
தாரேற்ற நீண்மார்பின் தம்இறைவன் நோக்கியக்கால்
போரேற்றும் என்பார் பொதுவாக்கல் வேண்டுமோ?
யார்மேற்றாக் கொள்ளினும் கொண்டீக காணுங்கால்
'ஊர்மேற்ற தாம்அமணர்க்(கு) ஓடு'.
315.
செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்
தம்மேற் புகழ்பிறர் பாராட்டத் - தம்மேற்றாம்
வீரஞ்சொல் லாமையே வீழ்க களிப்பினும்
'சோரம் பொதியாத வாறு'.
316.
உரைத்தாரை மீதுரா மீக்கூற்றம் பல்லி
நெரித்த சினைபோலும் நீளிரும் புன்னைப்
பொரிப்பூ இதழுறைக்கும் பொங்குநீர்ச் சேர்ப்ப !
'நரிக்கூஉக் கடற்கெய்தா வாறு'.
317.
அமர்நின்ற போழ்தின்கண் ஆற்றுவா ரேனும்
நிகரின்றி மேல்விடுதல் ஏதம் - நிகரின்றி
வில்லொடுநே ரொத்த புருவத்தாய் ! அஃதன்றோ
'கல்லொடு கையெறியு மாறு'.
318.
வரைபுரை வேழத்த வன்பகையென் றஞ்சா
உரைநடை மன்னருள் புக்காங்(கு) அவையுள்
நிரையுரைத்துப் போகாதொன் றாற்றத் துணிக
'திரையவித்து ஆடார் கடல்'.
319.
காத்தாற்று நிற்பாரைக் கண்டால் எதிருரையார்
பார்த்தாற்றா தாரைப் பரியாது மீதூர்தல்
யாத்ததே சில்லார் படையாண்மை 'நாவிதன்வாள்
சேப்பிலைக்குக் கூர்த்து விடல்'
320.
இஞ்சி அடைத்துவைத்(து) ஏமாந்(து) இருப்பினும்
அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் - அஞ்சி
இருள்புக் கிருப்பினும் மெய்யே வெரூஉம்புள்
'இருளின் இருந்தும் வெளி'.
321.
உருத்தெழு ஞாட்பினுள் ஒன்னார் தொலையச்
செருக்கினால் செய்கல்லார் செய்வாரே போலத்
தருக்கினால் தம் இறைவன் கூழுண் பவரே
'கருக்கினால் கூறைகொள் வார்'.
322.
அமர்விலங்கி ஆற்ற அறியவும் பட்டார்
எமர்மேலை இன்னரால் யார்க்குரைத்தும் என்று
தமர்மறையால் கூழுண்டு சேறல் அதுவே
'மகன்மறையாத் தாய்வாழு மாறு'.
323.
உறுகண் பலவும் உணராமை கந்தாத்
தறுகண்மை ஆகாதாம் பேதை- தறுகண்
பொறிப்பட்ட வாறல்லால் பூணாதென் றெண்ணி
'அறிவச்சம் ஆற்றப் பெரிது'.
324.
தன்னின் வலியானைத் தானுடையன் அல்லாதான்
என்ன குறையன் இளையரால்? மன்னும்
புலியிற் பெருந்திறல வாயினும் 'பூசை
எலியில் வழிப்பெறா பால்'.
325.
கொடையும் ஒழுக்கமும் கோளுள் ளுணர்வும்
உடையர் எனப்பட்டு ஒழுகிப் பகைவர்
உடையமேற் செல்கிற்கும் ஊற்றம் இலாதார்
'படையின் படைத்தகைமை நன்று'.
326.
இருகயல் உண்கண் இளையவளை வேந்தன்
தருகென்றாற் றன்னையரும் நேரார் - செருவறைந்து
பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால்
'வாழைக்காய் உப்புறைத்தல் இல்'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework